மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெல்லை பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.

viduthalai
2 Min Read

நெல்லை,பிப்.17– 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட் சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத் துகிறது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் _ -பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் நாடா ளுமன்ற தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதன்படி நெல்லையில் நேற்று (16.2.2024) நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனி மொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கனி மொழி எம்.பி. பேசியதாவது;-
“ஒன்றிய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங் களையும் அழிக்கக் கூடியதாக இருக் கின்றன. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.
பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார், உலகின் பழைமையான மொழி தமிழ் மொழிதான் என்று கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல் கின்றனர்.
ஆனால் சமஸ்கிருதத்திற்கும், ஹிந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் அவர்கள், தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை.
தென்மாநிலங்களை அவர்கள் கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண் டும் என்ற எண்ணத்தோடு செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்க ளின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என ஒன்றிய அரசு நினைக்கிறது.
ஒன்றிய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநில மாக நாம் உருவாக்கிக் காட்டியிருக் கிறோம்.
உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 ஆண்டுகளாக ஆட்சி யில் இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக் கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.”
-இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *