கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்

viduthalai
2 Min Read

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

கிளாம்பாக்கம், பிப். 16- கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வச திகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்ட மன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று (15.2.2024) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அமைச் சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் சா.சி.சிவசங்கர் ஆகியோர் சட்டப் பேரவையில் பதிலளித்தனர். இந் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறி யது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் அவற்றை தவிர்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளிக்கப்பட்டது. பெரிய பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிறிய பிரச்சினைகள் இருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட யார் கூறினாலும், சரி செய் வோம். தொடர்ந்து வாரம் ஒரு முறை நான் மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 9.2.2024 அன்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த செய்தி பெரிய செய்தியாக, மாற்றப் பட்டு வருகிறது. அன்றைய தினம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலிருந்து வரவேண்டிய பேருந்து கள் வந்து கொண்டிருந்த சூழலில், அந்தப் பேருந்துகள் குறித்த நேரத் தில் வந்து சேர முடியாத சூழல் ஏற்பட்டது. எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட் களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமோ, அதுபோல முகூர்த்த நாள் மற்றும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை ஆகிய வற்றை கருத்தில், கொண்டு பேருந் துகள் இயக்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்திலிருந்து அரசு விரைவு போக் குவரத்து கழகம் சார்பில் 361 பேருந் துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இன்று (16.2.2024) காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
1,215 பேருந்துகள் கிளாம்பாக் கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்பட உள்ளன. மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதி களும் செய்து தரப்படும். 6 ஏடிஎம்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனியார் யூடியூப் சேனல் ஒன்று தான் இந்த பிரச்சினைக்கு கார ணம் என கண்டறியப்பட்டுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *