அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த தேர்தல் நிதியில் பா.ஜ.க.வுக்கு 90 சதவிகிதம் நிதி சென்றதாக அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, பிப்.16- 2022-2023 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்குகார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தம் 680 கோடியே 49 லட்சம் ரூபாயை தேர்தல் நன்கொடையாக வழங்கியுள்ளன. இதில் 90 சதவீதம் நிதி, அதாவது 612 கோடி ரூபாய் நன்கொடை பா.ஜ.க. வுக்கு சென்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
2022-2023 இல் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகளில் 80.1 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங் கள்வழங்கியவை ஆகும்.
பா.ஜ.க.வை தவிர எஞ்சிய அரசியல் கட்சிகள் அனைத்துக்கும்சேர்த்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை வெறும் ரூ.70 கோடி மட்டுமே ஆகும். ஆனால், மற்ற கட்சிகளைக் காட்டிலும் பா.ஜ.க. வுக்கு கிடைத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடை 8 மடங்கு அதிகமாகும் என்பது குறிப் பிடத்தக்கது.
ஏழை மக்களைமறந்து கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவாக செயல்பட்டு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து அவர்களுக்கு ஏராளமான சலு கைகளை வாரி வழங்குவதால் பா.ஜ.க.வுக்கு இவ்வளவு பெரியத் தொகை தேர்தல் நிதியாக கார்ப்பரேட்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக பல்வேறு தரப் பினரும் விமர்சித்துள்ளனர்.
தேர்தல் நன்கொடையாக பா.ஜ.க.வுக்கு ரூ.612 கோடி கார்ப்பரேட் நிதி. 2022-2023 நிதியாண்டில் அரசி யல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தம் ரூ.680 கோடி தேர்தல் நன்கொடை இதில் 90% நிதி, அதாவது ரூ.612 கோடி நன்கொடை பா.ஜ.க.வுக்குச் சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
கார்ப்பரேட்டுகளை ஊக்குவிப்பதன் ரகசியம் இதுதான்!
Leave a Comment