ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது என்றார் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.

மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுய மரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண் ணுரிமை ஆகிய கொள்கைகள் இன் றைய அரசின் அடித் தளமாக அமைந்துள் ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக் கும்போதே அநாக ரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதைப் போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேர வையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படு வதும்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால், ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.
பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம் பெறச் செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ச்சியாக மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *