கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
0 Min Read

சென்னை, பிப். 11- தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையம் இன்றி வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் வழங்கப்படும் கடனுக்கு பிணையும் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *