புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

புதுக்கோட்டை, பிப். 7- புதுக்கோட்டை நகர் மன்றத்தில் வரும் 9.2.2024 மாலை 5மணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் திருநாள் விழா என முப்பெரும் விழாவாக கலைஞர் தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்நிகழ்விற்கு வருகை தரும்போது புதுக் கோட்டை திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமையில், அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் க.முத்து, காப்பாளர்கள் அறந் தாங்கி பெ.இராவணன், புதுக்கோட்டை ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலையில் கழகத் தோழர்கள் வரவேற்க உள்ளார்கள்.
எனவே கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரவேற்புக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் செய்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *