மின்சாரத்துறையில் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் உருவாக்க அரசாணை வெளியீடு

1 Min Read

சென்னை, பிப்.4 கடந்த ஆண்டு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், எரிசக்தி உற்பத்தி கழகம் என 3 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பசுமை ஆற்றலை ஊக்குவிக் கும் வகையில் பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் என்ற நிறுவனம் உருவாக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி புதிய பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்க கோரிக்கை வைத்தார். இந்த நிறு வனம் மாநிலத்தின் ஆற்றல் மாற்றத் திட்டங்களை விரைவாக கண்கா ணிப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும், இந்நிறுவனம் நீர் மின் நிலையம், நீரேற்று மின் நிலையம் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத் தும். மாசு இல்லாத ஆற்றல் தடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை கருத்தாக்கம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

தற்போது செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையையும் பசுமை ஆற்றல் நிறு வனத்துடன் இணைக்கவும் பரிந்து ரைக்கப்பட்டது. பசுமை ஆற்றல் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப் பில், நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், எரிசக்தி துறை செயலாளர், நிதித்துறை மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர், மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர், நிதி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் ஆகியோர் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரின் கோரிக்கையை பரிசீலித்த அரசு பசுமை ஆற்றல் நிறுவ னத்தை உருவாக்கவும், நிறுவனத் திற்கு தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் என பெயரிடவும், எரிசக்தி மேம்பாட்டு முகமையை இந்நிறுவ னத்துடன் இணைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *