ராமன் போதையில் மூழ்கிய மக்களுக்கு மோடி தந்த பரிசு!

1 Min Read

சென்னை, பிப்.1-சென்னையில் வணிக எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (1.2.2024) இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர் தலை முன்னிட்டு எரிவாயு உருளை விலை குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று (1.2.2024) அதி காலையிலேயே வணிக எரிவாயு உருளை விலை அதிகரிக்கப்பட் டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் எரிவாயு உருளை விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற் பனையாகி வந்த எரிவாயு உருளை, இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வணிக எரி வாயு உருளையின் விலை அதி கரித்து வருவதால், உணவகங்களில் உண வுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது வெளியூர்களில் தங்கி உண வகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமை யாய் கருதப்படுகிறது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை யின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *