சென்னை,ஜன.31- இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்களில் தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருக்கிறது. ஏதோ தங்களுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒன்றிய அரசு நடிக்கிறது. இட ஒதுக்கீடு என்ற தேன்கூடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். சமூக நீதிக்கு சமாதி கட்டும் நோக்கில் சதிச் செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசையும் பல்கலைக்கழக மானியக் குழுவையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்து சக்திகளும் ஓரணியில் திரண்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜ அரசின் சதிச்செயலை முறியடித்து சமூக நீதியை காக்க முன்வரவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இட ஒதுக்கீடு உரிமையை காக்கவும், பாஜ அரசுக்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:காங்கிரஸ்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books