‘கேலோ இந்தியா’ தாங்டா விளையாட்டுப் போட்டி: வீராங்கனைகள் வெற்றி!

viduthalai
1 Min Read

கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தாங்டா போட்டியில் மகாராட்டிரா, ராஜஸ்தான் வீரர்கள் வெற்றிபெற்றனர்.
கோவையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பிரிவாக தாங்டா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, அஸ்சாம், மணிப்பூர் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதில், திங்கள்கிழமை நடைபெற்ற 18 வயது பிரிவில் 56 கிலோ எடை பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் மகாராட்டிர வீரர் வைபவ் ஹேமந்த் 33-22 என்ற புள்ளிக் கணக்கில் பிகார் வீரர் சுபம் தேயை வீழ்த்தினார்.

2-ஆவது போட்டியில் ராஜஸ்தான் வீரர் அனில் சுரேஷ், லடாக் வீரர் முகமது முஸ்தபாவுடன் மோதினார். இதில், அனில் சுரேஷ் 26-13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
3-ஆவது போட்டியில் திரிபுரா வீரர் ஷகீல் நாத்தை மணிப்பூர் வீரர் கன்குஜன் சனந்த் சிங் 31-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
தொடர்ந்து இறுதிச் சுற்றுகள் இன்று (30.1.2024) நடைபெற்று, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *