ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது

viduthalai
2 Min Read

சென்னை, ஜன. 22- காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத் தாண்டில் கடந்த 1-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்-ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைக் கோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6ஆம் தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய் வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளி யில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது.
இந்த வெற்றிகரமான தொடக் கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்-14 என்ற ராக்கெட்டில் இன்சாட்- -3டிஎஸ் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது.
திரவ உந்துசக்தியைப் பயன் படுத்தும் மேம்பட்ட ராக்கெட் டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற் கைக் கோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள்
இந்திய வானிலை அமைப்புக்கு (அய்.எம்.டி.) சொந்தமானது ‘இன் சாட் -3 டிஎஸ்’ செயற்கைக் கோள். காலநிலை கண்காணிப்பு செயற் கைக் கோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் களை உள்ளடக்கியது. இன்சாட்-3 டி மற்றும் இன்சாட்-3 டிஆர் இவை ஏற்கெனவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப் பாதையில் உள்ளன. அடுத்ததாக தற்போது இன்சாட்-3 டிஎஸ் விண்ணில் ஏவப்பட உள்ளது.

8 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.எல்.வி.
கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்—-12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்—01 என்ற செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படு கிறது.
அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரை யோஜெனிக் திரவ உந்துசக்தி களைப் பயன்படுத்துகிறது.
ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *