சென்னையில் பிரதமரின் ஹிந்தி உரை மொழிபெயர்ப்பில் குழப்பமோ குழப்பம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.20- தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசுவதுதான் வழக்கம். அவ்வாறு மோடி ஆங் கிலத்தில் பேசும்போது, மொழி பெயர்ப்பாளர் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்படும். ‘கேலோ இந்தியா’ தொடக்க விழாவில் கலந்து கொண்ட மோடி, ஹிந்தி யில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடமாநிலங் களைச் சேர்ந்த பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற தால் மோடி ஹிந்தியில் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் மோடியின் பேச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாஷினி (செயற்கை நுண்ணறிவு அடிப் படையிலான மொழி பெயர்ப்பு ஆன்லைன் செயலி) என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தமிழில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதற்கான கியூ ஆர் கோடு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த பாஷினி தொழில்நுட்பம் மூலம் மோடி யின் ஹிந்தி பேச்சை தமிழில் அறிந்து கொள்ள பத்திரிகை யாளர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், பாஷினி தொழில் நுட்பம் மூலம் மோடியின் பேச்சு மொழி பெயர்க்கப்பட்டது தெளி வாக இல்லை. அதாவது, அவரது பேச்சு சீராக, அதேவேளையில் புரிந்து கொள்ளும் வகையில் அந்த மொழிபெயர்ப்பு இல்லை.
முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதனால் மோடி ஹிந்தியில் பேசியதை உடனடி யாக மொழி பெயர்க்க முடியாமல் பத்திரிகையாளர்கள் திணறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *