கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் எழிலேந்தி தாயார் சுகன்யா நினைவேந்தல் படத்திறப்பு!

1 Min Read

கடலூர், டிச. 9- கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் எழில் ஏந்தி அவரின் சகோதரர்கள் புக ழேந்தி மகிழேந்தி ஆகியோரின் தாயாரும் கடலூர் மறைந்த ஆசிரியர் கணேசன் வாழ்விணை யரு ம் ஆகிய சுகன்யா அம்மையார் நினைவேந்தல் படதிறப்பு நிகழ்ச்சி 7.1.2024 ஞாயிறு காலை 11:00 மணி அளவில் கடலூர் மகாராஜா அரங் கத்தில் செயலவை தலைவர் சு அறி வுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தண்ட பாணி, மாநகர தலைவர் தென் சிவக்குமார் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் எழிலேந்தி வரவேற்புரை ஆற்றி னார். கடலூர் சட்டமன்ற உறுப் பினர் அய்யப்பன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் புகழேந்தி, பேராசிரியர் ராச குழந்தை வேலன், நெல்லிக்குப்பம் வி.அழகரசன், வழக்குரைஞர் திருமார்பன், பொது நல கூட்டமைப்பு நிர்வாகிகள் ரவி, சுப்பராயன், கவிஞர் பல ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், தமிழ் தென்றல் ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அம்மையாரின் படத்தை திறந்து வைத்து நினைவு உரை ஆற்றினார். முடிவில் தமிழ் வேல் நன்றி கூறினார்.
நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு, மாவட்ட இளைஞர் அணி தலை வர் உதயசங்கர், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், வடலூர் கழக தலைவர் ராவணன், செயலா ளர் குணசேகரன், மேனாள் ஒன் றிய தலைவர் இந்திரஜித், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் தர்மலிங்கம், திராவிடன் தங்க பாஸ்கர், அய்ங்கரன், சொக்க நாதன் முதலான கழக நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *