சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – தமிழர் தலைவர் பங்கேற்பு

1 Min Read

சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் அ. கருணானந்தன் நிறுவிய பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு (2023-2024)விற்கு தலைமை ஏற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ் சுந்தரம் நினைவுப் பரிசு – புத்தகத்தினை வழங்குகிறார். ‘பெண் ஏன் அடிமையானாள்? பெரியார் – இந்திய முன்னோடி பெண்ணியச் சிந்தனையாளர்’ எனும் தலைப்பில் அறக்கட்டளை சொற் பொழிவாற்றிய டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டே அவர்களுக்கு அறக்கட்டளையினை நிறுவிய பேராசிரியர் அ. கருணானந்தன், நினைவு பரிசு – புத்தகத்தினை வழங்குகிறார். (சென்னை பல்கலைக் கழகம் – 8-1-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *