அதி கனமழையால் 2 முறை தள்ளி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாடு
ஜன 21-இல் சேலத்தில் நடைபெறுகிறது
சென்னை, ஜன.7 மக்களவைத் தேர் தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக தீவிர களப்பணியில் திமுகவும், அதன் கூட்டணி கட்சி களும் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுக இளைஞர் அணி யின் 2-ஆவது மாநில மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டிருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த டிச.17ஆ-ம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ‘மிக்ஜாம்’ புயல் மழைவெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் நடைபெற்றதால், மாநாடு டிச.24ஆ-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல் வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப் பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றதால், தேதி குறிப்பிடாமல் மாநாடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலை யில், திமுக இளைஞர் அணி மாநாடு ஜன.21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று (6.1.2024) வெளியிட்ட அறிவிப்பில், “மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி2-ஆவது மாநில மாநாடு வரும் 21ஆ-ம் தேதி சேலத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு இரண்டு முறை தள்ளிப் போனதால், வரும் 21-ஆம் தேதி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வும், மாநாட் டுக்கு அதிக அளவில் இளைஞர்களை அழைத்து வருவதற் கும் இளைஞர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.