வெள்ளப் பாதிப்பைப் பேரிடராக அறிவித்திடுக! மாநில அளவில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

1 Min Read

சென்னை, ஜன .5 மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்டப் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று (4.1.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, வள்ளுவர் கோட் டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை வகித் தார். உடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற தலைவர்கள் பேசியதாவது:

விசிக தலைவர் திருமாவளவன்: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லை என்பதால் அலட்சியப் படுத்து வதை ஏற்க முடியாது. பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை நிர் மலா சீதாராமனுக்கு வழங்கியது யார்? மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாற்றங்களைச் செய்ய முடியும். எனவேதான் வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச் சீட்டு முறையை பின்பற்றுகின்றனர். தமிழ்நாட்டில் கூட கடந்த தேர் தலில் சில மய்யங்களில் வாக்குப் பதிவு, வாக்குகணக்கு இடையே ஒத்துப்போக வில்லை. எனவே, 100 சதவீதம் விவிபேட் இயந்திரத்தைப் பயன் படுத்த வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா: மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள் ளது. பேரிடருக்கு நிதி வழங்காமல் இருந்து விட்டு, மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி வழங்குவ தாகப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன்: குடியுரிமை மசோதா அறிவிப்பை வெளியிட்டு, மதக்கலவரத்தை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளனர். அனைத்துகட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை அறி விக்க வேண்டிய கட்டாயம் உரு வாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இதுவரை வெள்ள பாதிப்புக்கென தமிழ்நாட் டிற்கு ஒருபைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *