தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆதாரை இணைப்பதா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி

viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 3- இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புச் சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு நிறைவேற்றியது.
இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளில், ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழி லாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை சீர் குலைத்து, முற்றாக அழித்தொழிக்கும் முயற் சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் வலைதள இணைப்பு கிடைக்காத நிலையில், தேசிய அலை பேசி வருகைப்பதிவு முறையை (என்எம் எம்எஸ்) கட்டாயப்படுத்தி, ஏற்கெ னவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித் துள்ளது.
தற்போது, பணி அட் டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய் கிறது. இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், வேலை உறு தியளிப்புச் சட்டம் மற் றும் அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படை உணர் வுகளுக்கும் எதிரானது.

டிச.30ஆ-ம் தேதிக்குள் ஆதார் அட்டையை இணைக்காத தொழிலா ளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தொழிலா ளர்களின் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமை முற்றாகப் பறிக்கப்படும்.

எனவே, பணி அட் டையுடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு மாநில அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *