வங்காரம் அலமேலு அம்மாள் படத்திறப்பு

1 Min Read

செந்துறை, டிச. 2- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வங்காரம் கிரா மத்தில் வசிக்கும் நாராயணசாமி செல்வநாயகம், சுப்பிரமணியன் மலர்க்கொடி ஆகியோரின் அன் புத்தாயாரும் சின்னசாமி அவர் களின் மனைவியுமான அலமேலு அம்மாள் (வயது 89) அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (1.1.2024) காலை 11 மணியளவில் வங்காரம் கிராமத்தில் மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் நடைபெற்றது.
இராவணன் மற்றும் கழக மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று இரங்கல் உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி படத்தினை திறந்து வைத்து இரங் கல் உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் ஊர் பெரியவர் களும், சான்றோர்களும், மறைந்த அம்மையாருடைய குடும்ப உறுப் பினர்களும் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் அம் மையார்தம் குடும்ப வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டினையும், சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களது தொண் டினால் உருவான பயன்களை பற்றி யும் எடுத்துக் கூறப்பட்டது. அனை வரும் எழுந்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *