‘பேரிடரே இல்லை’ என்று சொன்ன ஒன்றிய நிதி அமைச்சர் இப்பொழுது தமிழ் நாட்டுக்கு ஆய்வுக்கு வந்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 27- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடு வதற்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சரின் வருகை குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளிடையே மோதல் போக்கு எதுவும் இல்லை. முதலில் “பேரிடரே இல்லை” என்று ஒன்றிய நிதி அமைச்சர் சொன்னார்.

தற்போது ஆய்வு செய்வதற்காக வந்துள்ளார். ஆய்வு செய்துவிட்டு அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *