‘நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும்’ திருமாவளவன் வலியுறுத்தல்

viduthalai
0 Min Read

சென்னை,டிச.24- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“இ.வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பல்வேறு ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதை வல்லுநர்கள் ஆதாரங்களோடு நிறுவி வருகிறார்கள். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை வாக்குச்சீட்டு முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் வலியுறுத்து கிறோம்.”
-இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *