தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தொண்டறம் போற்றத்தக்கது தமிழர் தலைவர் பாராட்டு

1 Min Read

150 ஆண்டுகள் பெய்யாத பெரு மழையும், வெள்ளமும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தீரா வேதனையும் ஆறாத் துயரும் துடைக்கப்பட தமிழ்நாடு அரசு – முதலமைச்சர், அமைச்சர் பெரு மக்கள், அதிகாரிகள் மற்றும் பல தொண்டற அமைப்புகள் வெள்ளம் வடிந்தாலும் – வடியாத கண்ணீர் வெள்ளத்தை வடிய வைக்கும் வகையில் பல நிவாரண உதவிகளை நீந்தியும், படகு விட்டும் உதவுவது சிறந்த பாராட்டத்தக்க மனிதநேயம்.

திராவிடர் கழகம்

நமது தோழர்கள் பெரியார் தொண்டறக் குழுவினரும், மருத்துவக் குழுவினரும் சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உதவியது போல், பெரியார் மருத்துவக் குழுவினரும் முகாம்கள் அமைத்தும், மருந்துகளைத் தந்தும் உதவும் தொண்டறம் போற்றத்தக்கது; பின்பற்றத்தக்கது.

திராவிடர் கழகம்

ஏராளமான இளைஞர்கள் பகுத்தறிவு பெரியாரிஸ்டுகள், ‘மனிதனை நினை’ என்ற தந்தை பெரியாரின் ஆக்கப் பூர்வ கட்டளைக்கு உருவம் தந்து செயல் வடிவம் காட்டியது பாராட்டத்தக்கது.
தொடரட்டும் தொண்டறப் பணிகள்!

தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *