ஆவடி பெரியார் மாளிகையில் சுயமரியாதை நாள் விழா

viduthalai
2 Min Read

ஆவடி, டிச. 20- ” தகைசால் தமிழர் ” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
முதலில் ஆவடியில் உள்ள பெரியார் சிலைக்கு கழக தோழர்களுடன் இணைந்து மாவட்ட காப்பாளர் பா. தென் னரசு மாலை அணிவித்து முழக்கத்துடன் மரியாதை செலுத் தினர். பெரியார் மாளிகையில் மாவட்ட துணை தலைவர் வை. கலையரசன் தொடக்க உரையாற்ற மாவட்ட காப் பாளர் பா. தென்னரசு முன்னிலையில் மாவட்ட செயலாளர் க. இளவரசன் வரவேற்புரையுடன் மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில் பிறந்த நாள் விழா நடை பெற்றது. மாவட்ட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கேக்கை மாவட்ட காப்பாளர் பா. தென்னரசு வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.ஆவடி மாவட்ட கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த தோழர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் சுந்தராஜன், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், ஆவடி நகர செயலாளர் தமிழ்மணி, சுகந்தி, ஆவடி மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி மேனாள் செயலாளர் சிவகுமார், ஆவடி கனிமொழி, பெரியார் பிஞ்சுகள் சமத்துவ மணி, இளந்தென்றல் மணி யம்மை ஆகியோருக்கு மாவட்ட காப்பாளர் பயனாடை அணிவித்தார். ஆசிரியர் பிறந்த நாள் விழா மகிழ்வாக ‘விடுதலை’ நாளேட்டிற்கு பூந்தமல்லி பகுத்தறிவு ஓராண்டு சந்தாவும் பூந்தமல்லி நகர செயலாளர் தி. மணிமாறன் அரையாண்டு சந்தாவும் வழங்கினர். இறுதியில் மாநில மகளிரணி பாசறை செயலாளர் பா. மணியம்மை சிறப்பு ரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி, மாவட்ட துணை தலைவர் மு. ரகுபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயரா மன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ. இராமலிங்கம், திரு முல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன்,பூந்தமல்லி சந்திரபாபு பெரியார் பிஞ்சுகள் இனியன், நன்னன் ஆகி யோர் கலந்து கொண்ட னர். ஆவடி மாவட்ட துணை செய லாளர் பூவை தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *