மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜுவின் தந்தை சிவக்கொழுந்து விருத்தாசலத்தில் 18.12.2023 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்கு கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல் வன், மாவட்ட மாணவர் அணி பொறுப் பாளர் ராமராஜ், தமிழக வாழ்வுரி மைக் கட்சி தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன், மருதையன், எழுத்தாளர் இமையம், வெங்கட் ராமன், கோவன் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் மறைந்த பெரியவரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள் இரங்கல் ஊர் வலத்தில் கலந்து கொண்டனர். வழக்குரைஞர் ராஜுவுக்கு ஆறுதல் கூறினர் 19.12.2023 அன்று கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் செல்பேசி வழியே வழக்குரைஞர் ராஜுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜுவின் தந்தை மறைவு!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books