தந்தை பெரியார் -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம்!

viduthalai
1 Min Read

வடக்குத்து, டிச. 19- வடக்குத்து, அண்ணா கிராமம் தந்தை பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் கருத் தரங்கம் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி தலைமையில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோ தரன் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் 17.12.2023 ஞாயிறு மாலை 6:00 மணி முதல் 8.30 மணி வரை பெரியார் படிப்பகவளாகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய கழகத் தலைவர் கனக ராசு வரவேற்புரை ஆற்றினார். பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல் கழக பாடல்கள் பாடினார். கவிஞர் தீபக் பெரியார் அம்பேத்கர் பற்றிய கவிதை வாசித்தார். மாநில பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் வேலு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம், வடலூர் கழக அமைப்பாளர் முருகன், மறுவாய் கழக தலைவர் திருநாவுக்கரசு, மகளிர் அணி தோழர் சுமலதா, வடக்குத்து கிளைக் கழக தலைவர் தங்க பாஸ் கர் ஆகியோர் பேசிய பின் மேனாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அயலக தமிழ் துறை தலைவர் முனைவர் பிரபாகரன் “சட்ட மேதை அம்பேத்கர்” எனும் தலைப் பிலும், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “பெரியாரில் பெரியார்” எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவை அவசியம் குறித்து பொதுச்செய லாளர் தமது உரையில் வலியுறுத் தினார். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *