பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 18- பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக் குவதைத் தடுக்க, மாண வர்களுக்காக பிரத்யேக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அரசுப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியபடியே பய ணம் செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர். ஆபத்தை உணராமல் விளையாட்டுத்தனமாக மாணவர்கள் இதுபோல் பயணம் செய்வது பேருந் துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர் கள் தொங்கியபடி பய ணம் செய்து வருவதா கவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது

மாநகர பேருந்துக ளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க் குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்பார்வையாளர் கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட் டோரும் இந்தப் பணி களை மேற்கொள்கின்றனர்.
பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பய ணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமை யான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத் தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களிடம் மாந கர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப் புணர்வு ஏற்படுத்துகின் றனர்.
இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர் களும் அறிவுறுத்த வேண் டும் என தலைமை ஆசி ரியர்களிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆபத்தான முறையில் பய ணம் செய்யும் மாணவர் களைக் கண்டறிந்து, பெற் றோர் வாயிலாக நடவ டிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.
காலை, மாலை நேரங் களில் கூடுதல் பேருந் துகள் இயக்கப்படுவ தோடு, பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத் தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக் கப்பட்டு நிறைவேற்றப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *