கரோனா பரவல் – முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 18- கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர் கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று வைரஸ் கடந்த ஓராண் டாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு மீண் டும் அதிகரிக்க தொடங்கி யுள்ளது. அங்கு பரவி வரும் வைரஸ் ஜே.என்.1 எனப்படும் புதிய உரு மாற்றம் வைரஸ் என கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழ் நாட்டில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் நோய்த் தடுப்புப் பணிக ளும் தீவிரப்படுத்தப் பட் டுள்ளன. அதன் ஒரு பகு தியாக மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகா தாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தோனேசியா, தாய்லாந்து, கேரளாவில் கரோனா பாதிப்பு மீண் டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் காணொலி முறையில் அனைத்து மாநில அரசுகளுடனும் விவாதித்தார்.

கரோனா பரவலைக் கண்காணிக்கவும், பரி சோதனைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பை உறுதிபடுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
அதன்படி, மாவட்ட துணை சுகாதார இயக்கு நர்களுக்கு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகிறது.
அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கை கழுவுதல், தனி நபர் இடைவெளி போன்ற கரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இணை நோயாளிகள், கர்ப்பிணிகள், எதிர்ப் பாற்றல் குறைந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *