சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
6 Min Read

சென்னை டிச 16- சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. மேலும் ஹிந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதி ரான வாக்குகளை எதிர்க்கட் சிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையே உணர்த்துவதாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சமான மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளித ழுக்கு அவர் அளித்தப் பிரத்யே கப் பேட்டியில் கூறியதாவது:
கேள்வி: அண்மையில் வெளியான ஹிந்தி பேசும் மாநிலங்களின் சட்டப்பேர வைத் தேர்தல் முடிவுகள் பாஜ கவின் சக்தியை தடுப்பதற்கு இல்லை என்பதை உணர்த்துவ தாக இருக்கிறது. இந்தச் சூழ லில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட் டணியின் எதிர்காலத்தை நீங் கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. சட்டப்பேரவைத் தேர்தல்கள் மாநிலங்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்கொள்ளப்படுகின்றன. ராஜஸ்தானில் பாஜக வென்றிருந்தாலும்கூட வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால், காங்கிரஸைவிட வெறும் 10 லட்சம் வாக்குகளே பாஜக அதிகம் பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் பாஜக 6 லட்சம் வாக் குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றுள்ளது. மத்திய பிரதே சத்தில் மட்டுமே 35 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று உள்ளது. இதிலிருந்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை மடை மாற்றியிருந்தால் நிச்சயமாக இந்த மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகி றது. இண்டியா கூட்டணியா னது, மக்களவைத் தேர்தலின் போது பாஜக எதிர்ப்பு வாக்கு களை ஒருங்கிணைக்கும். அதன் மூலம் எளிதாக வெற்றியை சாத்தியப்படுத்தும்,. 3 மாநிலத் தேர்தல் முடிவு எங்களுக்கு ஒரு பாடம்.

கேள்வி: நீங்களும், ஆளு நரும் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநரும் உங்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா?

பதில்: நான் நிறையமுறை ஆளுநரை சந்தித்து ஆலோச னைகள் நடத்தியுள்ளேன். நாங்கள் பல அரசு நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக் கிறோம். அப்போதெல்லாம் அவர் என்னுடன் நல்லமுறையி லேயே பழகியுள்ளார். இங்கே சந்திப்பதென்பது பிரச்சினை யல்ல. ஆளுநர் தனது மனப் பான்மையை மாற்றி மாநில நனுக்காக செயல்பட வேண் டும். மக்களுக்கும், வளர்ச்சிக் கும், மாநிலக் கொள்கைகளுக் கும் எதிரான சக்திகளின் கைக ளில் கைப்பாவையாக இருப் பதை அவர் தவிர்த்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும்.

கேள்வி: சென்னை வெள்ள பாதிப்பைப் பார்த்த ஒன்றியக் குழு பாதிப்பு மிகவும் குறை வாகவே இருப்பதாகக் கூறி யுள்ளது. மாநில அரசின் முயற்சிகளையும் பாராட்டி யுள்ளது. இந்தச் சூழலில் நீங்கள் நிவாரணப் பணிகள் நிறைவாக செய்யப்பட்டதாக உணர்கிறீர்களா?

பதில்: ஒன்றியக் குழு தமிழ் நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட் டியது. நீர்நிலைகளில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் வெளி யேற்றப்பட்டதை பாராட்டி யுள்ளது. பாதுகாப்பு அமைச் சர் ராஜ்நாத் சிங்கும் இதே கருத்தை என்னிடம் சொன் னார். திமுகவும்- பாஜகவும் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி என்பது அனை வரும் அறிந்ததே. அப்படியிருந் தும் ஒன்றிய அரசு எங்களைப் பாராட்டியுள்ளது என்றால் அது எங்களின் திறன்வாய்ந்த செயல்பாட்டிற்கான சான்று.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்தது. மழை நின்ற மறுகணமே நாங்கள் நிவா ரணப் பணிகளைத் தொடங்கி னோம். போக்குவரத்து அடுத்த நாளே சீரானது. பெரும்பா லான பகுதிகளில் 3 நாட்களுக்கு மின் சேவை சீரடைந்தது. புறநகர்ப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியது. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தோம். அத்தியாவசிப் பொருட்களை வழங்கினோம்.
நானே தனிப்பட்ட முறை யில் பல இடங்களுக்குச் சென் றேன். 20 அமைச்சர்கள், 50 அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரி கள், 20 ஆயிரம் அரசு ஊழியர் கள் களத்தில் பணியாற்றினர். பிற மாவட்டங்களில் இருந்தும் உதவிகள் வந்தன. இன்றுவரை திமுக தனிப்பட்ட முறையில் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து வருகிறது. நாங்கள் மக்களுக்கான பணி புரிகிறோம். அவர்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். நீங்கள் இன் னும் சிறப்பாக செய்திருக்க லாமா என வினவினீர்கள். என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டால் எப்போதுமே மக்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

கேள்வி: 2015-இல் அப் போதைய அரசு செம்மபரம் பாக்கம் ஏரியில் இருந்து முன் கூட்டியே திறந்துவிடாததால் சென்னை பேரழிவைச் சந்தித் தது. ஆனால் உங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டும் பாதிப்பு பரவலாக இருந்தது ஏன்? அரசு என்ன பாடம் கற்றுக் கொண்டு உள்ளது?
பதில்:2015-இல் அதிகாரிகள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதி யைப் பெற்றே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட வேண்டி யதாக இருந்தது. ஆனால் எங்கள் அரசு நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பை படிப்படியாக செய்தது. நிலைமையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது. சென்னை அய்அய்டியின் மேனாள் பேராசிரியர் எஸ். ஜனகராஜன் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். 2015 வெள்ளம் மனிதப் பேரிடர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் மிச்சாங் புயல் 36 மணி நேரத்தில் 53 செ.மீ மழைப்பொழிவைக் கொண்டு வந்தது. மிச்சாங் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவிலேயே 16 மணி நேரம் நின்றிருந்தது. மணிக்கு 8 முதல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனால் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது. 177 ஆண்டு களில் இதுவே மூன்றாவது பெரிய மழைப்பொழிவு.
எங்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரிய போது பிரதமரும் கூட இதே கருத்தைக் கூறியுள்ளார். நாட் டிலேயே தமிழ்நாடு தான் காலநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்திய ஒரே மாநிலம். நாங்கள் இதற் காக ஒரு சிறப்புக் குழுவும் அமைத்துள்ளோம். சுற்றுச் சூழல் துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றப் பிரச்சி னைக்கு வேறு எந்த மாநிலமும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மக்கள் தொகையைப் பொறுத்து புயல், வெள்ளத்தை எதிர் கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கால நிலை மாற்றம் தான் மிக்கப் பெரிய பிரச்சினையாக இருக் கப்போகிறது என நான் நிறைய தருணங்களில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

கேள்வி: புறநகர்ப் பகுதி களில் ரியல் எஸ்டேட்டின் வரைமுறையற்ற வளர்ச்சி வெள்ளத்தை அதிகப்படுத்தி யதா?
பதில்: 2011 முதல் 2021 வரை அதிமுக எந்த ஒரு திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை. அதற்கான விலையை நாங்கள் கொடுத்துக் கொண் டிருக்கிறோம். ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பரிந்துரைகளின்படி நாங்கள் பல்வேறு திட்டங்களை இப் போது செயல்படுத்தி வருகிறோம்.

கேள்வி: புயல், வெள்ளத்தின் போது அரசு இயந்திரங்கள் கடுமையாக இயங்குகின்றன ஆனால் அதன்பின்னர் தேங்கி விடுகின்றன. ஆண்டு முழுவ துமே நிலைமையைக் கண் காணிக்க முடியாதா?
பதில்: அரசுத் தரப்பில் எந்தவித சுணக்கமும் இல்லை. திமுக அரசு செயல்படுத்தியுள்ள மழைநீர் வடிகால் திட்டத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். திமுக 2021இல் ஆட்சிக்கு வந் தது. எங்களின் வடிகால் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிப்பை குறைத்தது. எஞ்சிய பணியையும் விரைவில் முடித்துவிடுவோம். அடுத்தக் கட்டமாக புதிய திட்டங்களை வகுப்போம். அப்போது சென் னையின் மக்கள் தொகை, நக ரின் விரிவாக்கம் ஆகியன வற்றை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *