தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளபடி ”பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெருவெள்ள மருத்துவ முகாமுக்கு திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பான பங்களிப்பு!

viduthalai
2 Min Read

காரைக்குடி, டிச. 16- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகிய அமைப்புகள் தொண்டு செய்து வரு கின்றன. இதற்காக திரா விடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் முடிந்த வரை உதவி செய்து வருகின்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் ஆலோச னையில் உருவான, ”பெரியார் தொண்டறம் அணி”, மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்குப் பிறகு கடந்த 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை நகரம், புறநகர், தாம்பரம் போன்ற பகுதி களில் பாதிக்கப்பட்ட 15,000 மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி னர். அடுத்து, ”பெரியார் மருத்துவக் குழுமம்” தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் பேரிடர் காலங்களில் சிறப் பாக மக்களின் தேவை களை விளம்பரம் இல்லா மல் நிறைவு செய்து வரு கின்றன. பெரியார் தொண் டறம் அணி ஒருங்கிணைப் பாளராக ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவராக மருத்துவர் இரா.கவுத மன், செயலாளராக மருத்துவர் ச.மீனாம்பாள் ஆகியோரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை நல்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (15.12.2023) காரைக்குடி யில் முகாமிட்டிருந்த தமி ழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மாவட்டத் தோழர்கள் கழகப் பணிகள் குறித்தும், விடுதலை சந்தா வழங்கு வதற்காகவும் சந்தித்தனர். அப்போது காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, விடுதலை சந்தாக்கள் வழங்கிய தோடு, தான் நடத்திவரும் ”SKY MED HEALTH CARE” அமைப்பு மூலம் சளி, காய்ச்சல், இருமல், ஒவ்வாமை, வயிற்றுப் புண், வயிற்று வலி போன் றவற்றிற்கு ரூ. 30,000 மதிப்பிலான மருந்துகள் வழங்கியதற்கான பட்டியலை ஆசிரியரிடம் வழங்கினார்.
அதேபோல் ஊற்றங் கரை கழகத் தோழர் பழ. பிரபு, தான் நடத்திவரும் ”ராசா மருந்தகம்” மூலம், ரூ. 10,000 மதிப்பிலான மருந்துகள் சென்னை ஆவடிக்கருகிலுள்ள பட்டாபிராம் மருந்துக் கடையில் பெற்றுக் கொள்ளும்படியாக ஏற் பாடு செய்து கொடுத்தார். தொடர்ந்து கழகத் தோழர்கள், தனி நபர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதற்காக ஒருங்கி ணைப்பாளர்களிடம் பேசிக்கொண்டு இருக் கின்றனர்.

16.12.2023 சனிக் கிழமை இன்று அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவிலும், மேற்கு தாம்பரம் சமத்துவப் பெரியார் நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகிலும், 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை மேல்பட்டி பொன்னப் பன் தெரு, மரகதமணி தணிகாசலம் இல்லம் அருகிலும், சென்னை ஆடுதொட்டி வ.உ.சி நகரிலும், மேற்கு தாம் பரம் பாளையத்தம்மன் கோயில் அருகிலுமாக இரண்டு நாட்களில் அய்ந்து இடங்களில், ’பெரியார் மருத்துவக் குழுமம்’ சார்பில் மருத் துவ முகாம்கள் நடை பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Mission – Tamil Nadu), இந்தியா கேர்ஸ் (India Cares)), சைல்டு ஹெஃப் பவுண்டேஷன் (Child Help Foundation) ஆகிய மூன்று அமைப்புகளும், மிக்ஜாம் புயலால் நான்கு மாவட்டங்களில் ஏற் பட்ட வெள்ளப் பேரிடர் நிவாரணப் பணிகளில், பெரியார் மருத்துவக் குழு மத்துடன் இணைந்து பங் காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *