மனிதர்களின் பேராசையால் மறைந்த அழகிய தங்கப் பூக்கள்

viduthalai
4 Min Read

ஞாயிறு மலர்

புவிவெப்பமயமாவதால் குறிப்பிட்ட குளிர் சூழலில் மட்டுமே பூக்கும் அழகிய பூவினம் தைவானில் காணாமல் போனது குறித்த பதிவு.
தைவானில் உள்ள பழங்குடி இனத்தவரின் வாழ்வியலில் மிகவும் முக்கிய பூவாக கருதப்படுவது அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் என்று அழைக்கப்படும் மலர்கள் தைவானிய பழங்குடியினரின் விழாக்களுக்கு இன்றியமையாதவை.

மத்திய தைவானில் உள்ள அலிஷானின் மூடுபனி நிறைந்த மலைகளில், அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் உலாவரும் தோட்டம் என்ற பகுதியில் நுழைவாயில் என்று கூறப்படும் ஒரு மலர் உள்ளது.

டென்ட்ரோபியம் ஆர்க்கிட் அல்லது கோல்டன் கிராஸ் ஆர்க்கிட் எனப்படும் இந்தப் பூக்கள், பச்சை மூங்கில் மரங்களுக்கு இடையில் மிகவும் நெருக்கமான பகுதியில் மலர்கிறது. ஆரஞ்சு நிறத்தில் வெல்வெட் போன்ற மிருதுவான நடுப்பகுதியைக் கொண்ட அழகான, ஆனால் வாசமில்லாத ஒரு மலர். ‘சவு’ (Tsou) பழங்குடி மக்களைப் பொறுத்தவரை இவை அழகிய அரிய வகை தங்கப் பூக்கள். “எங்களது பழங்குடி நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் இந்தப் பூக்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் எங்களை அடையாளம் காண முடியாது,” என்கிறார் மூத்த பழங்குடி நபரான காவோ தெஷெங்.

ஒரு காலத்தில் ‘சவு’ பழங்குடி மக்களின் வீட்டுத் தோட்டங்களில் இவை அதிக அளவில் இருந்துள்ளன. ஆனால் இப்போது இந்தப் பூக்களைக் காண உயரமான மலைகளைச் சுற்றி இருக்கும் அடர்ந்த காடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

காலநிலை மாற்றம்தான் இந்த நிலைக்குக் காரணம் என பழங்குடிகள் நம்புகிறார்கள். பூக்களின் மொட்டுகள் விரிவதற்கு குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 12 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வசந்த காலத்தில் பூக்கள் பூக்கும். பூக்கள் பெரும்பாலும் 800 முதல் 1,800 மீட்டர் (5,900 அடி) உயரத்தில் மிதமான வெப்பநிலையில் வளரும்.

அலிஷான் வானிலை மய்யத்தின் உள்ளூர் வெப்பநிலை தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வசந்த காலம் மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.
புவி வெப்பமடைதலின் விளைவாக, அலிஷான் மலைவாசஸ்தலத்தில் நவம்பர் மாதத்தின் சராசரி வெப்பநிலை தற்போதைய 12-14 டிகிரி என்ற அளவிலிருந்து 2050க்குள் 14-16 டிகிரியாக உயரும் என்று கிரீன்பீஸ் மதிப்பிடுகிறது.

அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் இல்லாத நிலையைத் தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிறார் காவோ தெஷெங்.
சமீப காலங்களில் தைவானும் தொடர்ந்து வறட்சி மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலை போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
சூறாவளிகள் பெரும் அழிவைக் கொண்டு வரும் என்றாலும், தீவின் முக்கிய நீர் ஆதாரமாக அவைதான் விளங்குகின்றன. எனவே இம்முறை நடந்தது போல, சூறாவளிகள் கடலில் இருந்து தீவை நோக்கி நகரவில்லை என்றால், பயிர் விளைச்சல் பொய்த்துப் போகும். இது ‘சவு’ பழங்குடியினரின் விழாக்களை மட்டும் அல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

ஜுய்-சியாவ் சுங் கூறுகையில், “எங்கள் குடும்பம் பல தலை முறைகளாக மூங்கில்களை வளர்த்து வருகிறது. ஆனால் தொடர்ந்து ஏற்படும் வறட்சியால் அதற்கு ஏற்றாற்போல விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல் மூங்கிலின் விளைச்சல் சமீப காலங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் குறைந்துவிட்டது.

அவருடைய தோட்டத்தில் அடர்ந்த பச்சை காபி செடிகளுக்கு அப்பால்
மஞ்சள் நிற மூங்கில் தண்டுகளைப் பார்க்க முடிகிறது. காபி செடிகளும் சுங்கிற்கு சொந்தமானவையே, மழை குறைவாக இருந்ததால் அவர் மூங்கிலுக்குப் பதிலாக காபி பயிரிட முடிவு செய்திருந்தார். ஆனாலும் கூட அவரால் முழுமையான விளைச்சலைப் பார்க்க முடியவில்லை.
‘சவு’ பழங்குடி மக்களுக்குத்தான் அழகிய அரிய வகை தங்கப் பூக்களுக்கு மாற்றாக வேறு எந்த மலரும் இல்லை. பூக்களைக் கிடைக்கவில்லை என்றாலோ எங்கள் இனத்தின் கலாச்சாரமும் அழிந்துவிடும் என்கிறார் அப்பழங்குடியினப் பெரியவர் காவோ.

அத்தகைய சூழ்நிலையை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது நடந்துவிடும் என்ற பயமும் அவருக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் செழித்து வளர்ந்த, இப்போது காய்ந்து போய் ஒரு பெரிய பெட்டகம் ஒன்றில் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் செடியை ஊடகத்தினருக்கு காட்டுகிறார்.

பண்டைய பாரம்பரியத்தின்படி அழகிய அரிய வகை தங்கப் பூக்களை செயற்கையாக வளர்க்கக் கூடாது என்று ஆணையிடப் பட்டுள்ளது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன், முக்கியமான விழாக்கள் தொடங்குவதற்கு முன்பு அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும்.
‘சவு’ பழங்குடியினர் தைவானில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 16 பழங்குடியினங்களில் ஒன்று. பெரும்பான்மையான ஹான் சீனர்கள் வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் இத்தீவில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று, நாட்டின் மக்கள்தொகையான 23 மில்லியனில் 6,000 பேர் உள்ளனர். அவர்கள் அலிஷான் மலைகளில் வாழ்கிறார்கள், காட்டில் கோல்டன் கிராஸ் ஆர்க்கிட்கள் வளரும் பகுதிக்கு அருகில் வசிக்கின்றனர்.

முக்கியமாக இந்தப்பூக்களைப் பூக்கும் செடிகள் டைனோசர் காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகிறது. அதாவது சுமார் 80 கோடி ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கும். இத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்த இந்த அழகிய அரிய வகை தங்கப் பூக்களை மனிதர்கள் தங்களின் சுயநலத்தினால் இன்று காணாமல் ஆக்கி விட்டார்கள்

ஈஸ்டர் தீவில் 140 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மயில் போன்ற பெரிய பறவை ஒன்றை கண்மூடித்தனமாக மரங்களை வெட்டியதால் அந்த பறவை இனமே அழிந்து போனது, தற்போது யாரோ சிலர் பாறை ஒன்றில் வரைந்த அந்தப் பறவையின் உருவத்தை வைத்துத்தான் அந்தப்பறவை பூமியில் ஒருகாலத்தில் வாழ்ந்தது என்று அறிய முடிகிறது. தற்போது ஒருபழங்குடியின முதியவர் வைத்திருக்கும் பெட்டியில் காய்ந்த சருகாக கிடந்த அழகிய அரிய வகை தங்கப் பூக்களும் செடிகளும் இன்னும் சில ஆண்டுகளில் மக்கி மண்ணாக மாறிவிடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *