எண்ணெய் கழிவுகளால் 797 பைபர் படகுகள் சேதம் எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு

viduthalai
3 Min Read

எண்ணூர், டிச. 15- எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோ சனை நடத்தினார். எண்ணெய் கழிவுகளால் 797 பைபர் படகுகள் சேதமடைந்து உள்ளதால் மீனவர் களுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகு திகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. அப்போது மணலி பகுதியில் உள்ள தொழிற் சாலையில் இருந்து எண்ணெய் கழிவுகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுதிருவொற்றியூர் ஜோதி நகர், கார்கில் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்ததால் வீடுகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

எண்ணெய்க்கழிவுகளுடன் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர் எண்ணூர் கடல் முகத்துவாரம் பகுதியில் கலந்தது. இதனால் எண் ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப் பம், எண்ணூர் குப்பம், காட்டுக் குப்பம், சின்னக்குப்பம் முகத்து வாரம் குப்பம் உள்ளிட்ட 8 கிரா மங்களை சேர்ந்த மீனவர்கள் கடு மையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 பைபர் படகுகளும், வலை களும் எண்ணெய் கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மீனவர் களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரை யில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 797 பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ4கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேதமடைந்த மீன்பிடி படகு களை சீரமைக்கவும், புதிய மீன்பிடி வலைகளை வாங்கவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து, படகு களுக்கு ரூ.15 ஆயிரம், வலைகளுக்கு ரூ.10 ஆயிரம் என 25 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் நேற்று 4ஆவது நாளாக 108 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி னார்கள் கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண் ணெய் கழிவுகள் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. இதுவரை 23 டன் வரை எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளில் என்னென்ன பொருட்கள் அதிகம் கலந்துள்ளது என்பது எண்ணெய் கழிவுகளுடன் தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் பீனால் என்ற பொருளும், கிரீசும் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந் தது. மழைநீர் கால்வாயில் எடுக்கப் பட்ட நீரை ஆய்வு செய்ததில் அதில் பீனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கலந் திருப்பது தெரியவந்தது.

அதேபோல் கொசஸ்தலை ஆற்றுநீரை ஆய்வு செய்தபோது அதிலும் பீனால் மற் றும் கிரீஸ் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. எனவே மழைநீரில் கலந்தது கச்சா எண்ணெய் அல் லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோ லிய பொருட்களாக இருக்கலாம் என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் படிந் துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து உள்ளூர் அள விலான பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டம் சென்னை மாநக ராட்சி ரிப்பன் கட்டடத்தில் நேற்று (14.12.2023) மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கூடுதல் ஆணை யர்கள் சங்கர்லால் குமாவத். ஆர். லலிதா, தலைமை பொறியாளர் என்.மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரிடர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம்கள் மற்றும் கால் நடை மருத்துவ முகாம்கள் பாதிக் கப்பட்ட வீடுகளின் முழுமையான கணக்கீடு, படகு மற்றும் மீன்பிடி வலைகளின் சேதங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து விவாதிக்கப்பட் டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *