கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் ஏன் ஹிந்தி கற்கவில்லை என்ற கேள்வி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

viduthalai
1 Min Read

சென்னை,டிச.15- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் ஹிந்தியில் பேசி, அவர் ஹிந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.

“தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந் தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்ட னத்துக்குரியது.

ஹிந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?
பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங் களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *