லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் பிணை மனு விசாரணை தள்ளி வைப்பு

viduthalai
3 Min Read

திண்டுக்கல், டிச.15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை இயக்குந ராக இருப்பவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆ-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணி புரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.
அதன்படி கடந்த 1-ஆம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சம் பணத்தை வாங்கியபோது காவல்துறையினர் அங்கிட் திவாரியை கையும், களவு மாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனு மதி வழங்கியது அதன்படி, 12.12.2023 முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத் தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 மடிக் கணினிகள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத் தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும் பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித் ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப் பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் 3 நாள் காவல் நேற்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை காவல்துறையினர் நேற்று (14.12.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்ப தால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு பினை வழங்கவேண்டும் என கேட்டு மதுரை நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் குற்றவியல் வழக்குரைஞர் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவ காசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசா ரணையை டிசம்பர் 19ஆ-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *