டிச.16, 17-ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

viduthalai
1 Min Read

சென்னை,டிச.14-கன்னியா குமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று (13.12.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ் நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழையும், நாளை (டிச. 15) மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
கனமழை வாய்ப்புள்ள மாவட்டம்: வரும் 16, 17-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம், மயிலாடுதுறை மாவட் டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓர ளவு மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக் கடல் மற்றும் அதை யொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்நாட் களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறி வுறுத்தப்படுகிறார்கள். இவ் வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *