மறைவு

1 Min Read

அரசியல்

கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கட்டளைப் பகுதியை சார்ந்த ஸ்டாலின் (வயது 41) நேற்று (23-10-2023) உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். இவருக்கு  மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் கழகம் நடத்திய போராட்டங் களில் கலந்து கொண்டவர். செய்தியறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்  கட்டளை வைரவன், கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், அமைப்பாளர் பெரியசாமி, கட்டளை ஊராட்சி தலைவர் சசிகுமார் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

– – – – –

பூந்தமல்லி டி.ஆர்.ஆர்.செங்குட்டுவனின் சகோதரி அ.அருள்மொழி (வயது 69) 2210-2023 அன்று காலை ‌11 மணிக்கு மரணமடைந்தார். தகவல் அறிந்து ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *