ஒப்புகைச்சீட்டைப் பொதுமக்களிடமே கொடுக்கவேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை

Viduthalai
2 Min Read

போபால், அக். 25- மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, விவிபாட் (VV PAT)  ரசீதை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கி ரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனையின்போது முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட ஓர் அறிக்கையை மேற் கோள் காட்டியுள்ள அவர் விவிபாட் ரசீது வாக்களர்களிடம் வழங் கப்பட்டு அவை வேறொரு வாக்குப் பெட்டியில் சேகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்துக்கு வலியுறுத்தியுள் ளார். 

இதுகுறித்து மாநிலத் தின் மேனாள் முதலமைச் சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் 23.10.2023 தனது எக்ஸ் பக்கத்தில், “மதிப்புக் குரிய தேர்தல் ஆணையத் துக்கு, எங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை உள்ளது. தேர்தலின் போது விவி பாட் ரசீதை எங்களிடம் (வாக்காளர்கள்) தனி யாக கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை தனியாக ஒரு வாக்குப்பெட்டியில் போடுகிறோம். வாக்குகள் எண்ணுவ தற்கு முன்பாக, அச்சீட்டு கள் சேகரித்து வைத்திருக் கும் ஏதாவது 10 வாக்குப் பெட்டிகளில் உள்ள சீட்டுக்களை எண்ணி, அதனை வாக்குப்பதிவு எண்ணிக்கையுடன் சரி பார்க்கவும். இரண்டின் முடிவுகளும் ஒன்றாக இருந்தால் பின்னர் வாக்கு முடிவுகளை வெளியிடவும். இதனைச் செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்சினை?. உச்ச நீதிமன் றத்துக்கு நான் ஒரு வேண் டுகோள் வைக்கிறேன். 

இந்த விடயத்தை தீவி ரமாக எடுத்துக்கொண்டு நாட்டின் ஜனநாயகத் தைக் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இத்துடன் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனையின் போது விவிபாட்-இல் ஒரே கட்சியின் சின்னம் பதிவானது குறித்த செய்தி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

திக் விஜய் சிங்கின் இந்தப் பதிவுக்கு மத்தியப் பிரதேச மாநில பாஜக செயலாளர் ரஜ்னீஸ் அகர்வால் அளித்துள்ள பதிலில், காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோற்கும் போது எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் மீது பழி போடுகிறது என்று குற்றம்சாட்டியுள் ளார். 

சமீபத்திய ஆண்டு களில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக தொடந்து பல்வேறு அர சியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. 2024ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலுக்கு முன் பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற் றும் விவிபாட் இந்திரங்க ளின் முதல்நிலைச் சோத னைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப் பட்ட மனுவினை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்தது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை இந்த மாதத் தின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத் திருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *