மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5.10 லட்சத்துக்கு மருத்துவ உதவிக்கான காசோலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

1 Min Read

சென்னை, டிச.12- மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலை களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் 6ஆவது கூட் டத்தின் போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (11.12.2023) வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.

மேலும், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண் மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, பத்திரி கையாளர் குடும்ப நலநிதியத் திட்டத்தின் கீழ் மூன்று பத்திரி கையாளர்களுக்கு மொத்தம் ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார். இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், பி.கோலப்பன், லட்சுமி சுப்பிர மணியன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *