உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் – மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

1 Min Read

புதுடில்லி, டிச.8– உள்ளாட்சி தேர் தலில், மக்கள்தொகைக்கு ஏற்ப ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேரத்தின் போது ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச் சர் கபில் மோரேஷ்வர் கூறிய தாவது,
அரசமைப்புச் சட்டத்தின் 243டி பிரிவின்கீழ், இதர பிற்படுத்தப்பட் டோருக்கு (ஓ.பி.சி.) 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது ஆனால், 21 மாநிலங்கள் ஓ.பி.சி.க்கு 50 சதவீத ‘ இடஒதுக்கீடு அளித்து வருகின்றன.
மக்கள்தொகைக்கு ஏற்ப உள் ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டை உயர்த்துமாறு உறுப்பினர் கோருகிறார். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை.
உள்ளாட்சி தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதிலேயே ஓ.பி.சி., எஸ்.சி. எஸ்.டி., ஆகிய சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது.
ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு அளிக்க மாநிங்களுக்கு உரிமை இருப்பதால், மாநிலங்களே முடிவு எடுக்கலாம்.
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *