ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

1 Min Read

போபால், டிச.7 மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப் லியா ரசொடா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. சிறுமி 5.12.202 அன்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட் டத்தில் விளையாடிக்கொண்டிருந் தார். அப்போது, அங்கு உள்ள ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் 22 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டிய மீட்புக்குழுவினர், அதிகாலை 2.45 மணியளவில் சிறுமியை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி உட னடியாக போபாலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவர் சில நிமி டங்களில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக் குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்
றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *