ஆசிரியர் அவர்களின் அனுபவமும், வழிகாட்டுதலும் இளம் தலைமுறைக்கு உறுதுணை புரியும்!

Viduthalai
1 Min Read

அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

அரசு, ஆசிரியர், தமிழ்நாடு

தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியரைத் தொடர்ந்து, இப்போது நம் கண்முன் வாழும் திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ‘தகைசால்’ தமிழர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு 91ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பத்து வயதில் தொடங்கி 81 ஆண்டுகளாக ஓய்வின்றி சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் அவர்களின் அனுபவமும், வழிகாட்டுதலும் ‘திராவிட மாடலை’ அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இளம் தலைமுறைக்கு உறுதுணை புரியும். நம் ஆசிரியருக்கு இனிய வாழ்த்துகள்!

-இவ்வாறு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *