பெரியார் பெருந்தொண்டர் நாகை அ.தங்கராசு படத்திறப்பு

1 Min Read

திராவிடர் கழகம்

நாகை, நவ.25- பெரியார் பெருந் தொண்டர் நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் அ.தங்கராசு அவர்க ளின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் நிகழ்வு 18.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் கீழ் வேளுர் ஒன்றியம் மேலஒதியத்தூர் அய்யா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கீழ் வேளூர் ஒன்றிய துணை தலைவர் அ.அரங்கராசு தலைமை ஏற்க, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன் அவர்கள் படத்தினை திறந்து வைத்தார்.

நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா மாலை அணி வித்து இரங்கல் உரை நிகழ்த்தினார். மாவட்ட இணை செயலாளர் வெ.இராமலிங்கம், ஒன்றிய செயலா ளர் அ.பன்னீர்செல்வம், திமுக ஒன்றிய பொருளாளர் பாரதி மோகன், மாநில திராவிட மாணவர் கழக சட்டக் கல் லூரி அமைப் பாளர் மு.இளமாறன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நிகழ்வில் கழகத் தோழர்களும், உற் றார் உறவினர்களும், ஊர் கிராம வாசிகளும் அனைத்து கட்சி தோழர் களும் திரளாக பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *