பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்!

Viduthalai
1 Min Read

சென்னை,நவ.30 – பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கையும், நெல்லையில் எஸ். வி. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த எஸ்.வி.சேகர் தன் மீதான குற்றச் சாட்டுக்களை மறுத்தார்.

இதையடுத்து எஸ்.வி. சேகர் தனது பதிவை நீக்கி விட்டதாகவும், மேலும் மன்னிப்புக் கோரியும் பிரமாண வாக்குமூலமும் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு தொடர்ந்த மனுதாரர் எஸ். வி. சேகர் மன்னிப்பு கூறியதை ஏற்றுக் கொள்வதாக கூறியதால் நீதிபதி வழக்கை முடிக்க உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *