குறவன், குறத்தி என்ற பெயரால் நடனமா? மதுரை உயர்நீதிமன்றம் தடை

2 Min Read

மதுரை,ஜன.12- ‘குறவர் சமூகத்தை இழிவுப டுத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள் ளது. மதுரை, விளாங்குடி யைச் சேர்ந்த முத்து முருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், ‘குறவர் சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச மான முறையில் குறவன் – குறத்தி ஆட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ள ஆபாச குறவன் – குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசா ரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநா ராயண பிரசாத் ஆகி யோர் நேற்று (11.1.2023) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படும் கலை களில் ஒன்றாக குறவன் – குறத்தி ஆட்டம் உள்ளது. தங்களின் அறிவுத் திற னுக்கு ஏற்ற வாறு தற்போ தைய சமூக அவலங்கள், அரசியல் உள்ளிட்ட கருத்துக்களை தெரிவிப்பர். இந்த பழமையான கலை தற்போது மாற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. பாரம்பரிய கரகத்தின் பயன்பாடு குறைந்துள் ளது. இதுபோன்ற சூழலில் குறவர் சமூகத் தினர் மீது தவறான புரிதல் உண்டாகிறது. சமூக வலைத்தளங்களில் ஏராளமான காட்சிப் பதிவுகள் உள்ளன. தங்க ளின் பயன்பாடு இல்லாத ஆட்டத்தில் அவர்களின் பெயரை பயன்படுத்து வதை தடுக்க வலியுறுத்து கின்றனர்.

எனவே, ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளில் குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பாக பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வகையில் நடத்தப்படும் ஆடல் – பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. 

குறிப் பிட்ட சமூகத்தை இழிவுப் படுத்தும் வகையிலோ, அவதூறு ஏற்படுத்தும் வகையிலோ  ஆடல் – பாடல் நிகழ்ச்சி இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் அளித்திடும் வகை யில் சைபர் கிரைம் காவல்துறையினர் தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும். 

இதை சரிபார்த்து சம்பந் தப்பட்ட காட்சிப் பதிவை அகற்றுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  உத்தரவிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *