4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

Viduthalai
1 Min Read

 சென்னை,ஜன.23- சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
தமிழ்நாடு நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜன. 23ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங் களில் உறை பனி நிலவ வாய்ப்புள்ளது. ஜன. 24ஆம் தேதி (நாளை) தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அவற்றை யொட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிக ளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன. 25, 26ஆம் தேதி களில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அவற்றை யொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத் தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *