பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 74ஆவது இந்திய குடியரசு தின விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்பு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

வல்லம், ஜன. 28- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) 74ஆவது இந்திய குடியரசு நாள் விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி அனைவருக் கும் குடியரசு நாள் நல்வாழ்த் துக்களை தெரிவித்தார். 

அவர் தமது உரையில் இந்திய திரு நாட்டின் 74ஆவது குடியரசு நாள் விழாவை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தேசிய மாணவர் படை,  மாணவர்க ளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் அவரது உரையில், இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க ஒவ்வொரு மாணவரும் உழைக்க வேண்டும் என்றார். அமெரிக் காவின் மெரிலாண்ட் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் பேரா. பூ.கு.சிறீவித்யா, அனைத்துதுறை முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித் தனர். 

குடியரசு நாள் விழா ஏற் பாட்டினை பல்கலைக்கழக தேசிய மாணவர் படை லெப் டிணட் பி.விஜயலட்சுமி, கேப் டன் உ.சரவணக்குமார், பிளையிங் அலுவலர் வி.பாண்டியராஜ் ஆகியோர் செய்திருந்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *