‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை, ஜன. 30- சென்னை, பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை நேற்று (29.1.2023) நடத்தியது.

இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு இப்பேர ணியை காவல்துறை கூடுதல் இணை ஆணையர் அனந்த குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ மனையில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி பல்லாவரம் பாலம் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடையும் வகையில் மொத்தம் 16 கி.மீ. தூரத்துக்கு நடத்தப் பட்டது. டாக்டர் காமாட்சி நினைவு குழும மருத்துவனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன், இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, இயக்குநர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி மற்றும் ஆலோசகர் டாக்டர் கே.எம். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *