திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி: சீனாவில் ஒரு புரட்சி

2 Min Read
உலகம்

பீஜிங், பிப்.1 சீனாவில் திருமணமா காதவர்கள் சட் டப் பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகி தத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுக ளில் இல்லாத அளவுக்கு சீனா வில் மக்கள் தொகை சரிந்துள் ளது. எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதி கரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. 

அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016ஆ-ம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங் கியது. இருந்த போதிலும் சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச் சியைத்தான் கண்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் தென்மேற்கு மாகாண மான சிச்சுவானில் திருமணமாகாத வர்கள் சட்டப்பூர்வமாக குழந்தை களைப் பெற்றுக் கொள்ள மாகாண அரசு அனு மதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தைப் பெற்று கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங் கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமண மாகாத தம்பதி களுக்கும் கிடைக்கும். 

இந்த புதிய விதிமுறைகள் வருகிற 15-ஆம் தேதி முதல் நடை முறைக்கு வரும் என்றும், திருமண மானவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந் தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். மாகா ணத்தில் சமீப ஆண்டுகளில் திருமணம் மற்றும் பிறப்பு விகி தங்கள் மிகவும் குறைந்துள்ள தால் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

சிச்சு வான், சீனாவின் 5-வது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதும், மக்கள் தொகையில் 21%க்கும் அதிக மானவர்கள் 60 வயதுக்கு மேற் பட்டவர்கள் என்ற அடிப்படை யில் சீனாவில் இந்த மாகாணம் 7-ஆவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *