சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை: மாநகராட்சி அறிவிப்பு

1 Min Read
அரசு, தமிழ்நாடு

சென்னை, பிப்.1- சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை வைக்கப் படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை நகரில் போக்கு வரத்து சந்திப்புகள் மற்றும் தெரு முனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உத வியாக உள்ளன.

ஆனால் பல இடங் களில் இந்த வழிகாட்டி பெயர்ப் பலகைகள் சேதம் அடைந்து அல்லது மங்கலாக காட்சி அளிக்கிறது. இதனால் செல்ல வேண்டிய இடம் தெரியாமல் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் சேதமடைந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு புதிய பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு ரூ.8.7 கோடி செலவில் 8 ஆயிரம் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்ப் பலகைகளை மாற்றும் பணி படிப்படியாக நடை பெறும். புதிய பெயர்ப் பலகை கள் ஆடம்பரமாக சிங்கார சென்னை 2.0 இலச்சினையுடன் காணப்படும். இரவிலும் பெயர் தெளிவாக தெரியும் வகையில் முப்பரி மாண தோற்றத்துடன் இவை தயாரிக்கப்படு கின்றன.

ஒவ்வொரு பெயர்ப் பலகையின் விலையும் ரூ.4,500 ஆகும். அவை டிஜிட்டல் முறை யில் அச்சிடப்படுவதால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பெயர்ப் பலகை களை விட இது தரமா னது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *