‘டுவிட்டரில்’ அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கழகத் தலைவருக்கு நன்றி!

1 Min Read
தமிழ்நாடு, திராவிடர் கழகம்

”தமிழ்நாடு” பெயர் பிரச்சினை குறித்து ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தெரிவித்த தவறான கருத்துக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் சரியாக பதிலடி கொடுத்து வருகிறார். அதனைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் (2.2.2023) அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் கழகத் தலைவருக்கு ‘டுவிட்டரில்’ பதிவு செய்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை பெரியார் வழியில் திராவிடக் கொள்கைகளை தமது 90 ஆம் வயதிலும் அயராது உலகெங்கும் பறைசாற்றி வரும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ இதழில் அறிக்கை எழுதி, எனக்கு ஆதரவு அளித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *