தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

Viduthalai
2 Min Read
தமிழ்நாடு

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணை யத்தால் ஒப்பந்த அடிப்படையில் 15,409 செவிலியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இவர்களது ஒப்பந்தப் பணி குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, நிரந்தர காலி பணியிடத்தில் வரிசைப் படி நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தால் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்கு 92 பேர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு 85 பேர் என 177 இருட்டறை (Dark Room) உதவியா ளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை யின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படு கின்றன. இங்கு காலியாக உள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-மிமி பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட் டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாள மாக, 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இதுதவிர, 21 இளநிலை உதவியாளர் பணியிடங்க ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் அடையாள மாக 4 பேருக்கு ஆணைகளை முதல மைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் செந்தில்குமார், மருத்துவ தேர்வு வாரி யத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் 

டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரி சுந்தரி, உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *