முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுறுசுறுப்பிற்கு காரணம்

Viduthalai
1 Min Read

 

தமிழ்நாடு

சென்னை, பிப்.19 ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆஃப் இந்தியா சார்பில் ‘கார்டியோபேஸ் 2023’ நிகழ்ச்சி சென்னையில்  நேற்று (18.2.2023) நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று,  ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதய சிகிச்சை மய்யத் தலைவரும், மூத்த மருத்துவருமான எஸ்.தணிகாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்.

பின்னர் முதலமைச்சர் பேசியதாவது: மருத்துவர் தணிகாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது, என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளத்தில் பதிந்திருக்கும். நான் பல நேரங்களில் மருத்துவர் தணிகாசலத்தை எனது `காட்பாதர்’ என்று கூறியுள்ளேன். மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் தணிகாசலத்துக்கும் இருந்த நட்பு சாதாரணமானதல்ல. மருத்துவ ரீதியாக ஏதாவது விவாதிக்க வேண்டும் என்றால், உடனே தணிகாசலத்தைக் கூப்பிடுங்கள் என்றுதான் முத்தமிழறிஞர் கலைஞர் சொல்வார். அந்த அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் நமது பேராசிரியர் தணிகாசலம். நான் சுறுசுறுப்புடன் சுற்றி வந்து, மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறுகின்றனர்.

நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று, சுறுசுறுப்பாகப் பணியாற்றுவதற்கு, மருத்துவத் துறையினரின் அறிவுரைதான் காரணம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், அகாடமி இயக்குநர்கள் செங்கோட்டு வேலு, முருகானந்தன், சென்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *